தமிழ்நாடு

நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்?

Published

on

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கனமழை காரணமாக தீபாவளிக்குப் பின்னர் பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றும் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் பல மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளையும் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை என சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வருவதால் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.

மற்ற மாவட்டங்களில் உள்ள நிலவரங்கள் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version