தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் திமுக வெற்றி, வால்பாறையில் அதிமுக வெற்றி!

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியினர் மட்டுமே வெற்றிக்கனியை பறித்து வருகிறது

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் முன்னிலையில் உள்ளது என்பதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்திலிருந்தே பூஜ்யத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் எழிலரசன் அவர்கள் வெற்றி பெற்று உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் மகேஷ்குமார் தோல்வி அடைந்துள்ளார்

அதேபோல் வால்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல்கந்தசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறுமுகம் தோல்வியடைந்துள்ளார். இந்த இரு முடிவுகளும் அதிமுக மற்றும் திமுக தரப்பில் தொண்டர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது

Trending

Exit mobile version