சினிமா செய்திகள்
காஞ்சனா 3’ பட நடிகை திடீர் தற்கொலை: என்ன காரணம்?
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா 3’ என்ற படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காஞ்சனா 3’. இந்த படத்தில் ஓவியா. வேதிகா. நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்டரியா ஜாவி ஆகிய 4 நடிகைகள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அலெக்சாண்டரியா ஜாவி என்பவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பதும் அவர் இந்த படத்தில் கிளாமராக நடித்து வந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நடிகை அலெக்சாண்டரியா ஜாவி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கோவா காவல்துறையினர் விரைந்து வந்து அலெக்சாண்டரியா ஜாவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, அலெக்சாண்டரியா ஜாவி காதலர் ரஷ்யா சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் கோவாவில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.