தமிழ்நாடு
சக்கர நாற்காலி விவகாரம்: கமல்ஹாசன் விளக்கம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் கூட்டமொன்றில் பேசிய போது ’சக்கர நாற்காலியில் இருக்கும் வரை நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்’ என்று கூறியிருந்தார். இதனால் திமுக தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிடும் வகையில்தான் கமலஹாசன் அவ்வாறு பேசியதாக கருதிய திமுகவினர் பலருக்கு #மன்னிப்புகேள்கமல் என்ற ஹேஷ்டெக்கை டுவிட்டரில் வைரலாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பதிலடியாக #மன்னிப்பாவதுமயிராவது’ என்ற ஹேஷ்டேக்கை கமல் ரசிகர்கள் வைரலாக்கினர்.
இந்த நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது இது குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்திருந்த போது அதனை பிடித்து தள்ளிக்கொண்டு வந்த கூட்டத்தில் நானும் ஒருவன் என்றும் வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசும் வாய்ப்பே கிடையாது என்றும் அவர் கூறினார். மேலும் எனக்கு கலைஞர் மீது மிகுந்த மரியாதை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்றாக கமல் தலைமையில் புதிய அணி உருவாகியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.