தமிழ்நாடு

“ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் கொல்வேன்!”- கமலின் ‘ஷாக்’ பேச்சு

Published

on

‘இந்தியன்’ திரைப்பட பாணியில் ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் கொல்வேன் என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.

கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார்.

தான் போட்டியிடும் கோவை தொகுதியிலும், மற்றும் தமிழகத்தின் பிற தொகுதிகளிலும் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் கமல்.

நாகை மாவட்டத்தில் மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல், ‘தமிழகத்தில் காவல் துறை, ஏவல் துறையாக மாறிவிட்டது. ஆட்சியில் இருப்பவர்கள் அதிக ஊழல் செய்கிறார்கள், தவறு செய்கிறார்கள் என்பதைப் பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில் நாமும் தவறு செய்யலாம் என்று காவல் துறையினர் நினைக்கிறார்கள். இந்த ஊழல் போக்கை நாம் தடுத்து நிறுத்திட வேண்டும்.

இந்தியன் திரைப்படத்தில் ஊழல் செய்யும் பெற்ற பிள்ளையை கொலை செய்வேன் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். என் நிஜ வாழ்க்கையிலும் அப்படிச் செய்வேன்’ எனப் பேசியுள்ளார்.

 

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version