தமிழ்நாடு
மக்கள் கேண்டீன்; நீட் தேர்வுக்கு பதிலாக ‘SEET’- ம.நீ.ம தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் கமல், ‘இந்த தேர்தல் அறிக்கை ஒரு முன் மாதிரி ஆவணமாக இருக்கும். எங்கள் தேர்தல் அறிக்கையில் தேவைப்பட்டால் மாற்றங்களை செய்து கொள்வோம். எதிர்க்கட்சி எதாவது முறையான மாற்றம் குறித்து சிபாரிசு செய்தால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதை ஏற்றுக் கொள்வோம்.
இன்று வெளியிடுவது மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை அல்ல. இது மக்களின் தேர்தல் அறிக்கை’ என்றார்.
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். #கோவையில்_கமல் #கோவை_தெற்கில்_நம்மவர் #கோவையும்_நமதே_கோட்டையும்_நமதே #நம்ம_சின்னம்_டார்ச்_லைட் #டார்ச்லைட்_சின்னத்திற்கு_வாக் https://t.co/7bpFga8AOE
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 19, 2021
ம.நீ.ம தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்:
234 தொகுதிகளிலும் அப்துல் கலாமின் புறா திட்டமான தற்சார்பு கிராமங்கள் உருவாக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
மக்கள் கேண்டீன் திட்டம் கொண்டு வரப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் கொடுக்கப்படும்.
தண்ணீர் புரட்சி ஒன்றை தமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கும்; நீலப்புரட்சிக்கு தனி அமைச்சகம் மற்றும் சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஊழலை ஒழிக்க கிராம நிர்வாக அலுவலர் முதல் முதல்வர் வரை காகிதமில்லா வெளிப்படையான பாதுகாப்பான மின் ஆளுமை அரசாட்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
விவசாயம், தொழிற்துறை, உற்பத்தி, சேவைத் துறையின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் ரூ.70 லட்சம் கோடியை எட்ட நடவடிக்கை.
நீட் தேர்வுக்கு மாற்றாக சீட் தேர்வு நடத்தப்படும்.