சினிமா

ரஞ்சித்துடன் கை கோர்க்கும் கமல்ஹாசன்… பரபர அப்டேட்…

Published

on

அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனரானவர் ரஞ்சித். அடுத்து கார்த்தியை வைத்து ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 3வது படமே ரஜினியை வைத்து கபாலி எடுத்தார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி தனது வயதுக்கு ஏற்ற வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் மீண்டும் ரஜினியை வைத்து காலா எடுத்தார் ரஞ்சித்.

அதன்பின் ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய படம்தான் சார்பட்டா பரம்பரை. வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது. இப்படத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த கமல்ஹாசனுக்கு இப்படம் மிகவும் பிடித்துப்போனதாம். எனவே, ரஞ்சித்தை நேரில் அழைத்து பாராட்டிய அவர் உங்கள் மேக்கிங் நன்றாக இருந்தது. நாம் இணைந்து ஒரு படம் எடுப்போம் எனக் கூற ரஞ்சித்துக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம். உடனே அவர் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். எனவே, இப்படம் முடிந்த பின் ரஞ்சித் – கமல்ஹாசன் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version