தமிழ்நாடு

எம்.எல்.ஏக்கள் அவரவர் தொகுதி மக்களை காப்பாற்றுங்கள்: கமல் டுவிட்

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்று வருகின்றனர். தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் அதன் பின்னர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அதன் பின்னர் வரிசையாக அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த பதவி ஏற்பு விழா இன்னும் சில நிமிடங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று பதவியேற்கும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version