தமிழ்நாடு
தமிழிசைக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கிவிட்டது: கமல்ஹாசன் பதிலடி!
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாஜக தமிழக தலைமை தமிழிசை குறித்த கேள்விக்கு அதிரடியாக பதிலளித்தார்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததை கமலுக்குப் பாராட்ட மனமில்லை. டார்ச் லைட் இருந்தாலும் அவருக்குப் பார்வைக் கோளாறு என கமல் ஹாசனை விமர்சித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கமலிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த கமல், அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போது அவருடன் விவாதம் செய்யும் நேரமில்லை. தண்ணீர் பிரச்சனையில் முன்னேற்பாடு செய்திருக்கவேண்டும் இதுதான் அறிஞர்களின் கருத்தும் என்றார்.