தமிழ்நாடு

அரசியல் தொடர்ந்து நடத்த பண உதவி செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்!

Published

on

தொடர்ந்து அரசியல் கட்சியை நடத்தவும் அரசியலில் தொடரவும் பண உதவி செய்யுங்கள் என பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கினார். அவருடைய கட்சி சட்டமன்ற, பாராளுமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த கட்சியிலிருந்து உறுப்பினராக யாரும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பதும் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனே தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து அரசியல் கட்சியை கமல்ஹாசன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து அரசியலில் ஈடுபட பண உதவி செய்யுங்கள் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்.

seithichurul

Trending

Exit mobile version