தமிழ்நாடு
கோவிட் தடுப்பூசி போட்டு கொண்ட கமல்: நாளை முதல் மீண்டும் பிரச்சாரம்!
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் அடுத்த கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது என்பது பாரத பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல பிரபலங்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர் என்பதும் தெரிந்தது
மேலும் திரை உலக பிரபலங்களும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட கமல் தனது டுவிட்டரில், ‘ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.