தமிழ்நாடு
இந்த அநீதி போக்கு இனியும் தொடர்வது நியாயமில்லை: கமல்ஹாசன் ஆவேசம்!
இந்த அநீதி போக்கு இனியும் தொடர்வது நியாயமில்லை என மேகதாது அணை குறித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேகதாது அணை குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசும், மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக அரசும் கூறி வருகிறது
இந்த நிலையில் நாளை தமிழக அனைத்து கட்சி குழு பிரதமரை சந்தித்து மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என கோரிக்கை விட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடக மாநில முதல்வரை சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் காவிரி விவகாரத்தில் நீதியின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும் என்றும், அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் பக்கமாக மத்திய அரசு சாய்ந்திருப்பது அநீதி என்றும் இந்த அநீதிபோக்கு இனியும் தொடரும் நியாயமில்லை என்றும் தெரிவித்துள்ளர.
கமல்ஹாசன் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: