சினிமா செய்திகள்

சிகாகோவில் கமல்ஹாசன்: புதிய நிறுவனத்தை தொடங்கினார்!

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சிகாகோ சென்றிருந்த நிலையில் அங்கு புதிய நிறுவனத்தை தொடங்கி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது கதர் துணிகளை ஏற்றுமதி செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.

தமிழகத்தில் கதர் துணிகளை தயார் செய்து அதை உலகம் முழுவதும் விற்பனை செய்து கதர் ஆடையை உலகம் முழுவதும் பரப்ப முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக கே.எச். ஹவுஸ் ஆஃப் கதர் என்ற நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த கதர் நிறுவனத்தின் தொடக்கவிழா சிகாகோவில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். தொழிலதிபர்களுடன் அவர் கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பதும் இந்த கதர் ஆடையை சிகாகோவில் உள்பட அமெரிக்கா முழுவதும் பெரும் வரவேற்பு கிடைக்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என அவர் கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகாகோவில் கமல்ஹாசன் தனது கதர் நிறுவனத்தை தொடங்கியதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version