தமிழ்நாடு

கை குலுக்கினாலே கூட்டணியா: சரத்குமார் குறித்து கமல்ஹாசன்

Published

on

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி உருவாகியுள்ளதாகவும் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தான் ஏற்றுக் கொண்டதாகவும் சரத்குமார் கூறிய நிலையில் கைகுலுக்கி சென்றாலே கூட்டணி உறுதியா? என்று கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக, திமுக தவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இணைய சரத்குமார் மற்றும் ஐஜேகே கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து இந்த இரு கட்சிகளும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் இணைந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் இன்று பேட்டியளித்த கமல், சரத்குமார் கட்சியுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதா? என்று கேட்ட கேள்விக்கு கைகுலுக்கி சென்றுவிட்டாலே கூட்டணி அமைந்து விட்டதாக அர்த்தமில்லை என்று கூறினார்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி உறுதியாக உள்ளதாகவும், நாங்கள் எங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் வரவிருப்பதாகவும், விரைவில் அது குறித்த தகவல்களை அளிப்போம் என்றும் கூறியுள்ளார்.

 

 

Trending

Exit mobile version