சினிமா செய்திகள்

சூர்யாவால் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Published

on

சூர்யா நடித்து வரும் படம் ஒன்றால் கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவதாக செய்திகள் வெளியாகியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் காரைக்குடி மாவட்ட நிர்வாகம் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அதே காரைக்குடியில் சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், ஒரே நேரத்தில் கொரோனா காலத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என காரைக்குடி மாவட்ட நிர்வாகம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

எனவே சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னரே கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் மேலும் இந்த படத்தில் வில்லன்களாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளார்கள் என்பதும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பகத் பாசில் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version