தமிழ்நாடு
மக்கள் நீதி மய்யம் அவசர செயற்குழு: முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு!
ஒரு பக்கம் அதிமுக கூட்டணி, மற்றொரு பக்கம் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் மூன்றாவது அணியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே இந்த கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து உள்ள நிலையில் விரைவில் வேறு சில கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரனின் அமமுக உள்பட ஒருசில கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்தால் இந்த கூட்டணி அதிமுக திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.