தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் அவசர செயற்குழு: முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு!

Published

on

ஒரு பக்கம் அதிமுக கூட்டணி, மற்றொரு பக்கம் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் மூன்றாவது அணியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே இந்த கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து உள்ள நிலையில் விரைவில் வேறு சில கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரனின் அமமுக உள்பட ஒருசில கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்தால் இந்த கூட்டணி அதிமுக திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் சரத்குமார் மற்றும் ஐஜேகே கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் என்னென்ன என்பதையும் இன்று செயற்குழுவில் கமல்ஹாசன் அறிவிப்பார் என்று தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version