சினிமா செய்திகள்

நாளை மீண்டும் வருகிறார் கமல்ஹாசன்: பிக்பாஸ் விறுவிறுப்பாகுமா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளைய தின நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மீண்டும் வருவதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த 60 நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் என்பதும் ஆனால் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த வாரம் மட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடத்தி வந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசன் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீண்டுவிட்டார் என்றும் இருப்பினும் அவர் டிசம்பர் 3ஆம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்றுடன் அவருக்கு தனிமைப்படுத்தப்படும் காலம் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் அவர் தனது இயல்பான பணிகளை தொடரலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும் பிக்பாஸ் படப்பிடிப்பில் அவருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக இருந்தாலும் கமல்ஹாசன் அளவிற்கு இல்லை என பலர் கருத்து கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வாரம் முதல் மீண்டும் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version