சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

கடந்த நான்கு ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் இந்த சீசன் 50 நாட்களை கடந்து தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென சமீபத்தில் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கமல்ஹாசன் மீண்டு வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது. மேலும் விஜய் சேதுபதி, சூர்யா, சிம்பு, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலரிடம் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளதாகவும் இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து விர்ச்சுவல் டெக்னாலஜி மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்துடன் விஜய் டிவி தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இதற்கு ஒப்புக்கொண்டால் ஒருசில எபிசோடுகள் மட்டும் மருத்துவமனையிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த வாரம் சனிக்கிழமை வரும் எபிசோடில் தான் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? அல்லது வேறு யாரேனும் தொகுத்து வழங்குவாரா? என்பது உறுதியாக தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version