தமிழ்நாடு
கோவை உணவகத்தில் போலீஸ் தாக்குதல்: கமல் கண்டனம்
நேற்று இரவு கோவை உணவகம் ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் உள்பட வாடிக்கையாளர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த எஸ்ஐ ஒருவர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை ஆயுதப்படைக்கு மாற்றினார். இருப்பினும் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக் கூடாது என்பதே அரசின் ஆணை. ஆனால் கோவை காந்திபுரத்தில் பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஒரு உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்குகிறது. சாத்தான்குளம் படுகொலையை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை என்று தெரிவித்துள்ளார்.
இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2021