தமிழ்நாடு

விருந்தினர் என கூறிய வானதிக்கு கமல்ஹாசனின் பதிலடி!

Published

on

தன்னை விருந்தினர் என கூறிய கோவை தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்

நேற்று கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சிறிய காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் ஓய்வு எடுத்தார். இதுகுறித்து கேள்விப்பட்ட கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கமல்ஹாசன் அவர்கள் இந்த தொகுதியின் விருந்தினர் என்றும், அவர் உடல் நலம் பெற இந்த மண்ணின் கலாச்சாரத்தின்படி வாழ்த்துகிறேன் என கூறியிருந்தார்

இதுகுறித்து இன்று தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது கமல்ஹாசன் பதிலடி கொடுத்தபோது ’வானதி சீனிவாசன் என்னை விருந்தினர் என கூறி கிண்டல் செய்திருந்தார். அந்த கிண்டல் எனக்கு பிடிக்கும். ஆனால் என்னை போல் நீங்களும் இந்த தொகுதியின் விருந்தினர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

மேலும் என்னையாவது வரவேற்க ஆள் இருக்கிறது. ஆனால் உங்கள் தலைவர் வந்தபோது ’கோ பேக்’ என்று கூறியதும் இந்த தமிழர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் பரமக்குடியில் பிறந்து, இராமநாதபுரத்தில் வளர்ந்து, சென்னை சென்று, மும்பை வரை சென்று உள்ளேன். இப்போது கோவையில் நிற்கின்றேன். எனக்கு சொந்த ஊர் என்று எதுவும் கிடையாது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் எனது கொள்கை’ என்று கூறினார்.

Trending

Exit mobile version