சினிமா செய்திகள்

முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணையும் சிவகார்த்திகேயன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

முதல் முறையாக உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தற்போது அவர் ’டான்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ், தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசன் இந்த படத்தை தயாரித்தாலும், கௌரவ தோற்றத்தில் அவர் நடிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. முதல் முறையாக கமல்ஹாசனுடன் சிவகார்த்திகேயன் இணைவதை அடுத்து இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version