தமிழ்நாடு

ஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல் திட்டம்!

Published

on

சென்னை: ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடளுமன்ற தேர்தலுக்கு எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும். யார் யாருடன் ஆலோசனை நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

சென்னையில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பேட்டியளித்தார்.

அதில், தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். லோக் சபா தேர்தலில் போது சூழ்நிலையை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிப்போம்.

ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசுவோம்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version