சினிமா

சரிகாவுக்கும் முன்னாடி.. கமலின் முதல் மனைவி வாணி கணபதி இப்போ எப்படி இருக்காரு பாருங்க!

Published

on

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டிய கலைஞரான வாணி கணபதி, பியாசி நாடி என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். 1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற திரைப்படத்தில் கமலுடன் ஜோடி போட்டு நடித்தார் வாணி கணபதி. இந்த படத்தில் நடித்த போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

#image_title

நடிகர் கமல்ஹாசனின் அழகையும் நடிப்பையும் பார்த்து மயங்காத நடிகைகளும் பெண்களும் அந்த காலத்தில் இல்லை. நடிகைகள் ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, பாலிவுட் நடிகை ரேகா என பல நடிகைகளும் இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக குட்டிபத்மினி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், அவர்கள் அனைவருக்கும் நோ சொல்லி விட்டு 1978ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை கமல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கமலும் அவரது முதல் மனைவி வாணியும் சுமார் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், 1988ம் ஆண்டு இருவருக்கும் இனிமே ஒத்துவராது என பிரிந்து விவாகரத்து பெற்று விட்டனர்.

#image_title

இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் இரண்டாவதாக சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மகனின் திருமணத்தில் 80களின் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் கலந்து கொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,ராதிகா, லிஸி, சுஹாசினி, வாணி கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக எந்த ஒரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத வாணி கணபதியை பார்த்து ரசிகர்கள் பூரிப்பு அடைந்தனர். கமல்ஹாசனின் முதல் மனைவியான வாணி கணபதியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version