தமிழ்நாடு

நிருபர் கேட்ட கேள்வி; பதில் சொல்ல முடியாமல் மேடையில் திணறிய கமல்! – வைரல் வீடியோ

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில நாட்களுக்கு எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும், சரத் குமார் தங்கள் கூட்டணியில் இணைவது குறித்தும், பழ.கருப்பையா தங்கள் கட்சியின் இணைவது குறித்தும் ஒரு சேர அறிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பை ஒருங்கிணைத்தது.

அதில், தமிழக அரசு சமீபத்தில் வன்னிய சமூகத்துக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒதுக்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து நிருபர்கள் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் சொல்லாமல் திணறிய கமல், நேரமிருந்தால் அது பற்றி கருத்து கூறுகிறேன் என்று சொல்லி சமாளித்து விட்டார்.

இந்த உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பெரும்பான்மையான கட்சிகள் வெளிப்படையாக கருத்து சொல்லாமல் தவிர்த்து வருகின்றன. அந்த யுக்தியை கமலும் வேறு வகையில் கையாண்டுள்ளார் என்று வீடியோ குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

 

Trending

Exit mobile version