தமிழ்நாடு

நண்பர்கள் வட்டம் பெருக… மக்கள் நீதி மய்யத்தில் சேருங்கள்- கமல்

Published

on

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தால் நண்பர்கள் வட்டம் பெருகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பல ஊர்களுக்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்களிடையே கமல் பேசுகையில், “மகளிரின் கூட்டம் அணிதிரண்டு நிற்கிறது. கட்சி கூட்டங்களில் பத்திரமாக பாதுகாப்பாக பயமின்றி மகளிர் வந்து நிற்கும் இடம் மய்யம். நான் எப்படிப்பட்ட நற்பணி நாயகர்களை நான் வளர்த்து வைத்திருக்கிறேன் என்பதை சரித்திரம் சொல்லும்.

இங்கு நடப்பது நேர்மைக்கும் மோசடிக்கும் இசையேயான போர். இதில் மக்கள் நேர்மையின் பக்கம் நிற்க வேண்டும். நீங்கள் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக மாறினால் உங்களுக்கு நண்பர் வட்டாரம் பெருகும். இந்த கூட்டத்தின் எண்ணமெல்லாம் மாற்றம் ஒன்று தான். அந்த மாற்றத்திற்கு நாமே தீர்வாவோம்” எனக் குறிப்பிட்டுப் பேசி உள்ளார்.

Trending

Exit mobile version