தமிழ்நாடு

கமல்-சரத்குமார் திடீர் சந்திப்பு: உருவாகிறதா புதிய கூட்டணி?

Published

on

தமிழகத்தில் தேர்தல் தேதி ஏப்ரல் 6 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக, இன்னொரு பக்கம் திமுக ஆகிய கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் நிலையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து விலகிய ஐஜேகே கட்சியும் புதிய கூட்டணி அமைத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கமல்ஹாசனைப் சரத்குமார் சந்தித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் கமல், சரத்குமார் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணியில் தேமுதிக உள்பட மேலும் சில அரசியல் கட்சிகள் இணைந்தால் அதிமுக, திமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version