தமிழ்நாடு
திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டசபையில் திறந்து வைக்கப்படும் கருணாநிதியின் படத்திறப்பு விழா!
தமிழகத்தில் கடந்த மே 7 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றது.
10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக தலைமையிலான அரசு மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. மேலும் திமுகவின் தலைவராக வெகு காலம் இருந்த கலைஞர் கருணாநிதி இல்லாமல், அக்கட்சி சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலும் இதுவேயாகும்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அக்கட்சி சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலும் இதுவேயாகும். இப்படியான சூழலில் தான் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனிப் பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைத்தது திமுக.
இந்நிலையில் கருணாநிதியின் படத் திறப்பு குறித்து சட்டசபை சபாநாயகர் அப்பாவு, ‘தமிழகத்தின் 5 முறை முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றிய முத்தமிழறிஞர், டாக்டர், கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத் திறப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி, மாலை 5 மணிக்குத் திறக்கப்படும். தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை வளாகத்தில் வைத்து இந்த திறப்பு விழா சிறப்பாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.