சினிமா செய்திகள்

கணவோரோடு படப்பிடிப்பில் காஜல் அகர்வால்..!- உற்சாக வரவேற்பளித்த மெகா ஸ்டார்!

Published

on

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் தனது படப்பிடிப்புக்காக கணவோரோடு ஆஜராகிவிட்டார் நடிகை காஜல் அகர்வால்.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்துக்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகியிருந்த நடிகை காஜல் அகர்வால் திருமணம், ஹனிமூன் என ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் கலந்துகொண்டுள்ளார். படப்பிடிப்புக்கு கணவர் கெளதம் கிச்சுலு உடன் வந்த காஜலுக்கு சிரஞ்சீவி மலர்கொத்து வழங்கி ஆசியும் வாழ்த்தும் தெரிவித்தார்.

சிரஞ்சீவியும் தனது குடும்ப திருமண விழாவை கோலாகலமாக நிறைவு செய்த பின்னர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் திரும்பிவிட்டார். முதலில் ஆச்சார்யா திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷாதான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக த்ரிஷா விலகிக்கொள்ள நடிகை காஜல் அகர்வால் நாயகியாக அறிவிக்கப்பட்டார்.

சிரஞ்சீவி உடனான காஜல் அகர்வால்- கெளதம் கிச்சுலு புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

seithichurul

Trending

Exit mobile version