தமிழ்நாடு

5 வருஷத்துல 1 லட்சம் பேர் கைலசாத்திற்கு வந்துருவாங்க.. நித்தி ஆரூடம்

Published

on

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கைலாசாவில் 1 லட்சம் பேர் வந்துவிடுவார்கள் என்று நித்தியானந்தா பரபரப்பு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

லீலை சாமியார் நித்தியானந்தா தனக்கென்று கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டு, தீவில் தன் சிஷய்யைகளுக்கு உபதேசம் நடத்தி வருகிறார். மேலும், சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, நெட்டிசன்களின் ஆல் டைம் சூப்பர் நித்தியாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கைலாசாவிற்கு 3 நாட்கள் ஆன்மீக சுற்றுலா வரலாம் என்றும் அவ்வாறு வர விருப்பம் உள்ளவர்களுக்கு 3 நாட்கள் இலவசா வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்கென ஆஸ்திரேலியாவில் இருந்து கருடா என்ற விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதனையடுத்து தற்போது புதிதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், இன்னும் 5 வருடங்களில் 1 லட்சம் பேர் கைலாசாவில் குடியேறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும் 10 ஆண்டுகளுக்குள் இந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version