வைரல் செய்திகள்

ஜி.பி.முத்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்- ‘காதல்’ பட நடிகர் போலீஸில் புகார்

Published

on

ஜி.பி.முத்து தனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ‘காதல்’ திரைப்பட நடிகர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

டிக்டாக் செயலி மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஜி.பி.முத்து. தற்போது யூட்யூப் தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஜி.பி.முத்து உட்பட சில யூட்யூபர்கள் சமுக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஆபாசமாகப் பேசி வருவதாகவும் அவர்களின் சமுக வலைதளப் பக்கங்களை முடக்க வேண்டும் என்றும் சிலர் காவல் துறையில் புகார் அளித்து இருந்தனர்.

அதுபோல், ஜி.பி.முத்து உட்பட இன்னும் சில யூட்யூபர்கள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் காதல் திரைப்பட நடிகர் சுகுமார் போலீஸிடம் புகார் கொடுத்திருந்தார். சில யூட்யூப் சேனல்களின் நேர்காணல்களிலும் இதுகுறித்து பேட்டி கொடுத்திருந்தார். இதனால், ஜி.பி.முத்து, சேலம் மணி, நெல்லை சங்கர் ஆகியோர் சுகுமாருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக நடிகர் சுகுமார், ஜிபி முத்து உட்பட மேலும் சிலர் மீது கொலை மிரட்டல் கொடுத்ததற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Trending

Exit mobile version