Connect with us

தமிழ்நாடு

‘ஏம்பா டிடிவி தினகரா… ஆர்.கே.நகர்ல இருந்து எதுக்குப்பா ஓடிவந்த..?’- கடம்பூர் ராஜூவின் நறுக் கேள்வி

Published

on

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களின் முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

களத்தில் மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது அமமுக – தேமுதிக கூட்டணி. இந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அமமுக பொதுச் செயலாளர், இந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஆகும். 

அந்த தொகுதியில் தமிழக செய்தித் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான கடம்பூர் ராஜூவும் களமிறங்குகிறார். இத்தொகுதியில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சி என்பதாலும், அமைச்சர் பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும் கடம்பூர் ராஜூ, மீண்டும் வெற்றி பெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தினகரன், இன்னொரு தொகுதியிலும் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் கடம்பூர் ராஜூ, ‘நான் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடுவேன். நான் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுகிறேன். அதே நேரத்தில் டிடிவி தினகரன், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தற்போது அங்கு நிற்காமல் கோவில்பட்டிக்கு வந்துவிட்டார். இப்படி தினகரன் ஓடிவரக் காரணம் என்ன?

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதிலிருந்து தொகுதி பக்கமே தலை காட்டாதவர் தினகரன். அவர் சட்டமன்றத்துக்கே மூன்று நாட்கள்தான் மொத்தத்தில் வந்திருப்பார். பின்னர் எப்படி தொகுதிப் பக்கம் போயிருப்பார்’ என்று கிண்டல் தொனியில் விமர்சித்துள்ளார். 

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!