சினிமா செய்திகள்

பாலுமகேந்திரா கதையை சுட்டாரா விக்னேஷ் சிவன்? வதந்தியை பரப்பும் போலி பத்திரிகையாளர்கள்!

Published

on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் பாலுமகேந்திரா இயக்கிய ரெட்டை வால் குருவி படத்தின் காப்பி என்று தங்களைத் தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு திரியும் போலி பத்திரிக்கையாளர்கள் வதந்தியை கிளப்பி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது .

பாலுமகேந்திரா இயக்கிய ரெட்டை வால் குருவி படத்தில் மோகன் ராதிகா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரிடமும் மாறி மாறி காதல் செய்து திருமணம் செய்து கொள்வார். ஒருவரை காதலிப்பதும், திருமணம் செய்வதும் இன்னொருவருக்கு தெரியாது என்பதும் ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரியும்போது என்ன நடக்கும் என்பதுதான் கதை .

ஆனால் விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் என்பது ஆரம்பம் முதலே அவர் இருவரையும் மாறி மாறி காதலித்து வருகிறார் என்பதும் இருவருமே தாங்கள் ஒருவரை தான் காதலிக்கின்றோம் என்று தெரிந்தே காதலிக்கும் காமெடியான கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படை உண்மையை தெரிந்து கொள்ளாமல் போலி பத்திரிகையாளர்கள் சிலர் வேண்டுமென்றே இந்த படத்தை காப்பி என்று வதந்தியை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version