சினிமா செய்திகள்
சூர்யா இந்த படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஓடிவிடுவார் என நினைத்தேன்: பிரபல இயக்குநரின் அதிர்ச்சி பேச்சு!
சூர்யா நடிப்பில் சென்ற வாரம் வெளியான காப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் காப்பான் திரைப்படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய தகவல் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சூர்யா நேருக்கு நேர் படத்தில் நடித்த போது, அவர் இந்த படத்தோடு சினிமாவை விட்டு ஓடிவிடுவார் என நினைத்தேன். ஆனால் பாலா, அமீர், கவுதம் மேனன் ஆகியோர்களுடன் இணைந்து நடித்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளார். இன்று சாதித்துக் காட்டியுள்ளார்.
அயன் படத்திலேயே நன்றாக நடிப்பில் தேர்ந்திருந்தார். அனைத்தையும் சுலபமாக நடித்துக் கொடுத்துவிட்டார் என கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.