சினிமா செய்திகள்

தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம்: இயக்குனர் கே.பாக்யராஜ்

Published

on

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு சில படங்களை பார்க்கும்போது தியேட்டர்கள் திறக்காமல் இருந்திருக்கலாமோ என்ற ஆதங்கம் ஏற்படுவதாக பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் அவர்கள் கூறியுள்ளார்.

’கடைசி காதல் கதை’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும் போது திரையரங்குகள் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சினிமா இண்டஸ்ட்ரி கடந்த இரண்டு வருடங்களில் இருந்தது போல் இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று கூறினார்.

அது மட்டுமல்ல பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற வகையில் ஒரு சில படங்களுக்கு எதிராக நானே பொதுநல வழக்கு தொடரலாம் என்றும் முடிவு செய்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற ஆபாசமான படங்களை பொது மக்கள் ஆதரிக்க கூடாது என்றும் நீங்கள் ஆதரித்தால் நீங்கள் விரும்புகிறீர்கள் என்று உங்கள் மேல் பழியைப் போட்டு இன்னும் இதே போன்ற பல படங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் மோசமான படங்களை பொதுமக்கள் ஆதரிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மோசமான படங்கள் என்று சமீபத்தில் வெளியான எந்தெந்த படங்களை பாக்யராஜ் கூறுகிறார் என்பது குறித்து அவர் விளக்கவில்லை. என்றாலும் சமீபத்தில் வெளியான ஒரு சில படங்கள் ஆபாசத்தின் உச்ச கட்டமாக இருந்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version