தமிழ்நாடு

நெட்டிசன்களின் சரியான கவனிப்பு: மன்னிப்பு கோரினார் கே.பாக்யராஜ்

Published

on

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கே.பாக்யராஜ் கூறிய நிலையில் நெட்டிசன்களின் சரியான கவனிப்பு காரணமாக தற்போது அவர் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது.

இன்று காலை நடந்த விழாவில் கே பாக்யராஜ் பேசியபோது பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறினார். அவருடைய இந்த சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக நெட்டிசன்களின் பிடியில் இருந்த இளையராஜா விடுவிக்கப்பட்டு பாக்யராஜ் இன்று காலை முதல் சிக்கினார். இதனை அடுத்து கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்ததால் தற்போது கே.பாக்யராஜ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் .

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் தான் எதுவும் கூறவில்லை என்றும் தனது கருத்தால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறினார். மேலும் திராவிட இயக்க தலைவர்களை பார்த்து தான் வளர்ந்தவன் என்றும் தன்னுடைய சினிமாவிலும் திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தான் இருக்கும் என்றும் இனியும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version