தமிழ்நாடு
பாஜக மாநில துணைத் தலைவரானார் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, அண்மையில் பாஜகவில் தன்னை முறையாக இணைத்துக்கொண்டார்.
அண்ணாமலைக்கு தேசிய அளவில் பாஜகவின் இளைஞர்களில் பிரிவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அண்ணாமலைக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நீண்ட காலமாகக் காலூன்ற நினைக்கும் பாஜக, அண்ணாமலை மூலமாக இளைஞர்களைக் கவர நினைப்பது குறிப்பிடத்தக்கது.