தமிழ்நாடு

காவல்நிலையத்தில் கல்லூரி மாணவர் கொலையா? பாஜக அண்ணாமலை கண்டனம்!

Published

on

முதுகுளத்தூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதுகுளத்தூரில் காவல் நிலையத்திற்கு கல்லூரி மாணவர் ஒருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென அந்த மாணவர் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

காவல்துறையால் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றன

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியபோது முதுகுளத்தூரில் காவல்துறையால் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார் என்றும் இதற்கான உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது!

வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்! தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும்.

சகோதரரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்!

seithichurul

Trending

Exit mobile version