சினிமா
ஜோதிகாவிற்கு பிடித்த நடிகர்களின் பெயர்களை சொன்னார்!
திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற பெண் கதாபத்திறத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ராதாமோகன் இயக்கத்தில் மொழி திரைப்படத்தில் நடித்துப் பெறும் வர வேற்பினை பெற்றதை அடுத்து தற்போது காற்றின் மொழி என்ற படத்தில் ஜோதிகா மீண்டும் இணைந்துள்ளார். இப்படம் வருகிற 16-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசும்போது, நான் மூன்று தமிழ் நடிகர்களுடன் நடிக்கும்போது மட்டும் மிகவும் சௌகரியமாக உணர்வேன் என்று கூறினார். அந்த மூன்று ஹீரோக்களின் பெயர்கள் சூர்யா, அஜீத் மற்றும் மாதவன் எனச் சொன்னார்.
ஆனால் ரஜினி, கமல், விஜய், விக்ரம், சிம்பு எனப் பல நடிகர்களுடனும் ஜோதிகா நடித்துள்ள போதும் இந்த மூன்று நடிகர்களுடன் நடிக்கும்போது மட்டும் சௌகரியமாக உணர்ந்தேன் என்று ஜோதிகா கூறினார்.