சினிமா செய்திகள்

ஜோதிகா பேசியது அயோக்கியத்தனமா? அப்படி என்ன சொல்லிட்டாங்க ஜோதிகா?

Published

on

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜோதிகாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், இது அயோக்கியத்தனமானது என்று தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, தனியார் நிறுவனம் அளித்த விருது விழாவின் போது பேசிய நடிகை ஜோதிகா, “பிரகதீஸ்வரர் கோவில் மிக அழகாக இருபதக்காக்கவும், உதய்பூர் அரண்மனை போன்று கோவிலை சிறப்பாகப் பராமரித்து வருகின்றனர்” என்று ஜோதிகா புகழ்ந்துள்ளார்.

இதில், எங்கு சர்ச்சை உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். அடுத்து தொடர்ந்து பேசிய ஜோதிகா, “அடுத்த நாள் படப்பிடிப்பு அரசு மருத்துவமனையிலிருந்தது, வெளியில் சொல்ல முடியாது அளவுக்கு அந்த மருத்துவமனை மிக மோசமான நிலையில் பராமரிப்பு செய்யப்பட்டு இருந்தது.

கோவில்களுக்கு அதிகப் பணம் வழங்கி, வண்ணம் பூசிப் பராமரிக்கும் நீங்கள், தயவு செய்து பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு நிதி வழங்க வேண்டும். இது மிக முக்கியமானது என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

மேலும் மருத்துவமனையின், அந்த நிலையைப் பார்த்து மனம் உடைந்த நான், அந்த கோவிலுக்கு போகவில்லை” என்று ஜோதிகா பேசியிருந்தார்.

ஜோதிகாவின் அந்த பேச்சு தற்போது சமுக வலைத்தளங்களில் சர்ச்சையாக்கப்பட்டு வைரல் ஆகி வரும் நிலையில், ஜோதிகாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், “ஜோதிகாவின் பேச்சு 100 சதவீதம் புரிதல் அற்ற ஒன்று என்றும், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். சுத்தமான ஹாஸ்பிட்டல் நல்ல பள்ளிகள் அவசியம். கோவிலுக்கு பதில் இதைச்செய்யவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரைக் கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை சமுக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஜோதிகாவுக்கு ஆதரவாகவும், எஸ்.வி. சேகருக்கு எதிராகவும் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version