Connect with us

இந்தியா

ஹிஜாப் விவகாரம் – கர்நாடக உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு…..

Published

on

girl

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, கல்லூரி மாணவர்களின் போர்வையில் அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் காவி துண்டை அணிந்து கல்லூரிகளுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்வதாக சமூகவலைத்தளங்களில் புகார் எழுந்தது.

மேலும், கர்நாடகாவை சேர்ந்த பாஜகவினர் இதை கையில் எடுத்து அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு ஹிஜாப் கல்லூரிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

ஹிஜாப் அணிந்து வந்த ஒரு கல்லூரி பெண்ணின் அருகில் சென்று பலர் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர். ஆனாலும் அந்த மாணவி அஞ்சவில்லை. மேலும், அவர்களை எதிர்க்கும் விதமாக ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கினார். தனக்கு எதிராக அத்தனை பேர் இருந்தும் அவர் அஞ்சவில்லை. சிங்கப்பெண்ணாக எதிர்ப்பை தெரிவித்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதன் பின்னரே இந்த விவகாரம் சூடு பிடித்தது.

ஒருபக்கம், ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என மாணவர்கள் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பள்ளி கல்லூரிகளில் உள்ள சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆனால் அதே நேரத்தில் ஹிஜாப் அணிவது குறித்த விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

இதில் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அணிந்து செல்ல தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!