தமிழ்நாடு
இனிதான் எல்லாமும்.. .. நக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம்!
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இவரது கைதுக்கு எதிராக தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்திற்கு வெளியே அமர்ந்தபடி போலீசுக்கு எதிராகவும், கைதுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.