சினிமா செய்திகள்
இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளே 1.2 மில்லியன் பாலோயர்கள் பெற்ற ஜோதிகா!
பிரபல நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளே 1.2 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்று சாதனை செய்துள்ளார்.
பிரபல நடிகையும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். தற்போது அவர் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமார் ஆகிய இருவரும் சகோதரர் சகோதரிகளாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் முதன்முதலாக தனது பயணத்தை தொடங்கி உள்ளார் ஜோதிகா. அவர் இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய முதல் நாளில் 1.2 மில்லியன் ஃபாலோயர்கள் அவரது பக்கத்தில் உள்ளனர் என்பதும் மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் புளுடிக் வாங்கி வெரிஃபைட் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள முதல் பதிவு தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த பதிவில் சுதந்திர தினத்தின் பொது இமயமலையில் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் உள்ளன என்பதும், இந்த புகைப்படங்களில் ஜோதிகாவும் அவரது நண்பர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.