தமிழ்நாடு
ரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி
ரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றத்தில் தூத்துக்குடி செயலாளராக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். இவர் ஏற்கெனவே திமுகவில் இருந்து விலகி ரஜினி மன்றத்தில் இணைந்தவர். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதனால் ஜோசப் ஸ்டாலின் மீண்டும் திமுகவில் இணைவதாக கூறினார்.
இந்த நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை ஜோசப் நேரில் சந்தித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன் அவருக்கு கட்சிப் பதவி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். அவருக்கு திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச்செயலாளராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்தத் துறையில் உள்ளவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.