உலகம்
ஜானுக்கு சென்டினேலீஸ் ஆதிவாசிகள்தான் உயிர்.. குடும்பத்தினர் உருக்கம்!
சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனின் உறவினர்கள் தற்போது உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.
அந்தமானில் உள்ள சென்டினல் தீவிற்கு கடந்த வாரம் செல்ல முயன்று போது ஜான் ஆலன் என்று அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார். ஜான் ஆலன், கடந்த வாரம் 14ம் தேதி அங்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை சென்டினேலீஸ் மக்கள் மூன்று நாட்கள் வைத்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அதன்பின் அவரை கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஜானின் குடும்பத்தினர் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளனர். ஜானின் மரண செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தங்கள் குடும்பத்தையே உலுக்கி உள்ளது என்றுள்ளனர்.
அந்த தீவில் இருக்கும் சென்டினேலீஸ் மனிதர்களை மன்னித்துவிட்டோம். இதில் அவர்களுடைய தவறு எதுவும் கிடையாது, என்றுள்ளனர்.