Connect with us

கிரிக்கெட்

INDvENG- ‘பயப்படாம விளையடுங்கப்பா!’- இங்கி., வீரர்களுக்கு ஜோ ரூட் ஓப்பன் ரிக்வஸ்ட்

Published

on

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள், அச்சம் கொள்ளாமல் விளையாட வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி, 2 – 1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து அணி, மூன்றாவது போட்டியைப் போல முழுவதும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாட வேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்குகிறது.

இருப்பிடும் மூன்றாவது டெஸ்டைப் போலவே நான்காவது டெஸ்டிலும் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய திணறுவார்கள் என்றே தெரிகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள், இந்த ஆட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஜோ ரூட், ‘இந்தியா போன்ற நாட்டில் ஒரு பேட்டிங் குழுவாக எப்படி வெற்றி பெற வேண்டும் என்கிற திறனும் ஆற்றலும் எங்களிடம் உள்ளது. அதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இந்த மனப்பான்மையை முதன்மையாக வைத்துக் கொண்டு இன்னும் தைரியத்துடனும் சுதந்திரத்துடனும் ஆட்டத்தை அணுக வேண்டும். அப்படிச் சொல்வதனால் களத்தில் இறங்கியவுடன் மனம் போன போக்கில் பேட்டை சுழற்றிக் கொண்டிருக்கக் கூடாது. சூழலைப் பார்த்து பயப்படாத வண்ணம் நம் ஆட்டத்தை வகைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே சொல்ல வருகிறேன்.

என்ன செய்வதென்று தெரியாமல் க்ரீஸிலேயே மாட்டிக் கொள்வது, இரண்டு மனநிலைகளுடன் பந்தை அணுகுவது உள்ளிட்டவைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சுதந்திரமாக களத்திற்குச் சென்று தாம் விரும்பிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும், ரன்கள் குவிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் இங்கிலாந்து வீரர்கள் விளையாட வேண்டும் என விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த அணி மீது அதிக அழுத்தம் உள்ளது.

 

இந்தியா4 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்9 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்20 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்31 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்44 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்56 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!