வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட நீதித்துறையில் வேலை !

Published

on

வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அடிப்படை வேலைக்குக் காலியிடங்கள் 15 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 15

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. இரவு காவலர் – 12
2. முழு நேர பணியாளர்(மசால்ஜி) – 03

கல்வித்தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்ப வேண்டும்.

கல்வித்தகுதி: வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற districts.ecourts.gov.in/vellore மற்றும் districts.ecourts.gov.in/tn/vellore என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவோர் மட்டும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை நீதித்துறை நடுவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேலூர் – 632 009

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202019%20Criminal%20Unit%20-%20Vellore_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 16.05.2019

seithichurul

Trending

Exit mobile version