வேலைவாய்ப்பு

கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை!

Published

on

திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியிடங்கள் 08 உள்ளது. இதில் ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர். ஓட்டுநர் வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 08

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

வேலை: ஓட்டுநர் – 02
கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி, தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் 62,000 வரை

வேலை: ஆய்வக உதவியாளர் – 01
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 15,900 முதல் 50,400 வரை

வேலை: அலுவலக உதவியாளர் – 05
கல்வித்தகுதி: 8-ஆம் தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் 50,000 வரை

வயது: எம்பிசி, பிசி பிரிவினர்32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்35க்குள்ளும், பொதுப்பிரிவினர் 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் https://tiruvannamalai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, தண்டராம் பட்டு ரோடு, கால்நடை பெருமருத்துவமனை வளாகம், திருவண்ணாமலை என்ற அஞ்சல் முகவரிக்கோ அல்லது நேரிலோ ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/01/2020012332.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.02.2020

seithichurul

Trending

Exit mobile version