வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியிடங்கள் 242 உள்ளது. இதில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்:242
வேலை: Assistant Engineer
காலியிடங்கள்: 78
மாத சம்பளம்: ரூ. 78 37,700 முதல் 1,19,500 வரை.
வேலை: Environmental Scientist
காலியிடங்கள்: 70
மாத சம்பளம்: ரூ.37,700 முதல் 1,19,500 வரை.
வேலை: Assistant (Junior Assistant)
காலியிடங்கள்: 38
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் 62,000 வரை.
வேலை: Typist
காலியிடங்கள்: 56
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் 62,000 வரை.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், வேதியியல், சுற்றுச்சூழல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வேதியியல், உயிரியியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் டெக்னாலஜி, மைக்ரோபயோலஜி, பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தொடர்பான 6 மாத படிப்பை முடித்தவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுப் பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, விதைகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துக்கொள்ள https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2020