வேலைவாய்ப்பு
தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!
தமிழக அரசின் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் செயல்பட்டும் மருந்தகங்களில் காலியிடங்கள் 405 உள்ளது. இதில் மருந்து விநியோகிப்பார் அல்லது மருந்து வழங்குபவர் போன்ற தற்காலிக வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 405
வேலை: மருந்தாளுநர் அல்லது மருந்து வழங்குபவர் (Dispenser)
வயது: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 57 வயது பூர்த்தியடையாதவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற ஏதாவதொரு பிரிவில் மருந்தாளுநர் அதாவது டிப்ளமோ இன் பார்மஸி முடித்திருக்க வேண்டும் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் டிப்ளமோ இன் பார்மஸி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: நாளொன்றுக்கு ரூ.750 வழங்கப்படும். தினமும் 6 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் வேலை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தமிழக சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnhealth.org -இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்கநர், அறிஞர் அண்ணை அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 016
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnhealth.org/nptification.php அல்லது http://www.tnhealth.org/online_notification/notification/N19082117.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019