வேலைவாய்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை!

Published

on

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 58. இதில் மூத்த மற்றும் தனிநபர் உதவியாளர் பணியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 58

வேலை செய்யும் இடம்: தில்லி

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Senior Personal Assistant (SPA)
காலியிடங்கள்: 35
கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியைச் செயல்படுத்தும் திறனுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வேலை அனுபவம்: 2 ஆண்டுச் சுருக்கெழுத்து கிரேடு-டி அல்லது சுருக்கெழுத்தைத் தட்டச்சு செய்பவராகச் சமமான தரத்தில் அல்லது உயர் தரத்தில் வேலை செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.47,600 வழங்கப்படும்.

வேலை: Personal Assistant (PA)
காலியிடங்கள்: 23
கல்வித்தகுதி: எதாவெதாரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியைச் செயல்படுத்தும் திறனுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.44,900 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆங்கிலத்தில் சுருக்கெழுத்துத் தேர்வு, கணினியில் தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.10.2019

seithichurul

Trending

Exit mobile version